வெப்படை அருகே வாகனம் மோதி நடந்து சென்றவர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை

வெப்படை அருகே வாகனம் மோதி நடந்து சென்றவர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2022-09-25 18:45 GMT

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே அம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் நடந்து சென்றவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெப்படை போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்