தமிழகத்தில் அ.தி.மு.க.தான் பிரதான எதிர்கட்சி - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் அ.தி.மு.க.தான் பிரதான எதிர்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2023-10-06 11:28 GMT

கோவை,

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.தான் பிரதான எதிர்கட்சி என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றதை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது தி.மு.க. அரசின் கடமை.

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.தான் பிரதான எதிர்கட்சி. தமிழகத்தை 30 ஆண்டு காலமாக ஆட்சி செய்து, பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கட்சி. யாருக்கு யார் எதிரானவர்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தேசிய கட்சிகள் கூட மாநில பிரச்சினைகளை வைத்தே அரசியல் செய்கின்றன. தமிழக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்