40 வயதை கடந்தும் திருமணமாகாத விரக்தி: பெற்றோரை கொல்ல முயன்ற மகன் - நாமக்கல்லில் பரபரப்பு

40 வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என விமல் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

Update: 2024-04-16 05:26 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மல்லித்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 70). இவருடைய மனைவி வத்சலா (65). இவர்களுக்கு விமல் (40) என்ற மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விமல் ராசிபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் அவ்வப்போது வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே 40 வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என விமல் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விபரீத முடிவை எடுத்தார். அதாவது தனது தாய், தந்தைக்கு குளிர்பானத்தில் திராவகத்தை கலந்து கொடுத்தார். இதனை குடித்த சந்திரசேகரன், வத்சலா இருவரும் மயங்கி விழுந்தனர்.

இதனைத்தொடர்ந்து விமல் தானும் குளிர்பானத்தில் திராவகத்தை கலந்து குடித்தார். சிறிதுநேரத்தில் துடிதுடித்த விமல் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகாத விரக்தியில் தாய், தந்தைக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்