விஷ மாத்திரைகளை தின்று முதியவர் தற்கொலை

பெரியகுளம் அருகே விஷ மாத்திரைகளை தின்று முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-14 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்து (வயது 61). இவர், தப்படிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர், வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்து தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சிக்கொல்லி (விஷம்) மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்