நேதாஜியின் கனவுப்படி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம் -கவர்னர் சமூக வலைதளப்பதிவு

நேதாஜியின் கனவுப்படி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம் என்று தமிழ்நாடு கவர்னர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-22 01:03 GMT

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:- நமது தேச விடுதலைக்காக மகத்தான தியாகங்களை செய்த நேதாஜி மற்றும் அவரின் துணிச்சலான வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இந்நாளில் அவர்கள் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை நிறுவினர். அவர்களது கனவு களின்படி 2047-க்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்