திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் - எடப்பாடி பழனிச்சாமி

கனமழைக்கு முன் தேவையான முன்னெச்சரிக்கை எடுக்காததால் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன.

Update: 2023-12-21 05:43 GMT

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கரிப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் தந்தையின் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சென்னை கனமழை பெய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த அரசு அதனை அலட்சிய படுத்திய காரணத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தேவையான முன்னெச்சரிக்கை எடுக்காததால் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் பருவகாலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வானிலை ஆய்வு மையத்தின் மீது பழி சுமத்த முயல்கிறது . 

மேலும் திமுகவின் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்பது அவர்கள் ஊழல் செய்ததே ஆகும். எனவே திமுகவில் இன்னும் பல்வேறு அமைச்சர்கள் கைது செய்யபடுவார்கள். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது, என்றும் அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்