கார் மோதி முதியவர் பலி

நெல்லையில் கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2023-10-17 19:00 GMT

நெல்லை டவுன் மாதா நடுத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 62). நகை பட்டறை தொழிலாளியான இவர் நேற்று மாலையில் நெல்லை டவுன் நயினார்குளம் ரோட்டில் மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக அருணாசலம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்