அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-01-23 03:12 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ மாகாணம் ஜுலியட் நகரில் இன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. 2 வீடுகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ரோமியோ நான்சி என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகின.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய ரோமியோ நான்சியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்