இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: கே.எல். ராகுலை நீக்க வாய்ப்பு..?
இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
இதற்கான இந்திய அணியை ஓரிரு நாட்களில் சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வு கமிட்டி தேர்வு செய்ய உள்ளது. இதில் 20 ஓவர் தொடருக்கான அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட வாய்ப்புள்ளது.