ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா-தென்கொரியா ஆட்டம் டிரா ஆனது.

Update: 2018-05-19 22:15 GMT
டோங்கா சிட்டி,

5 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் உள்ள டோங்கா சிட்டியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இந்தியா-தென்கொரியா அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தென்கொரியா அணியில் சியல் கி சியோனும் (20-வது நிமிடம்), இந்திய அணியில் லால்ரெம்சியாமியும்(49-வது நிமிடம்) கோல் போட்டனர். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா (காலை 11.30 மணி) அணிகள் மீண்டும் மோதுகின்றன.

மேலும் செய்திகள்