9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் ஹெராஜ் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று மாலை கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன், மிட்டாய் தருவதாக கூறி சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுமியை, சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நடந்த கொடுமை குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.