ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி பெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ரகுமான் (வயது 60). இவர் சம்பவத்தன்று மூடபித்ரியில் உள்ள தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ரகுமானுக்கு முன்னால் 25 வயது இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு ரகுமான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். இதுகுறித்து பக்கத்தில் நின்றவர்கள் இளம்பெண்ணிடம் கேட்டனர். அதற்கு இளம்பெண் ஒன்றும் தெரிவிக்கவில்லை.
இளம்பெண்ணுக்கு ரகுமான் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமீக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் மூடபித்ரி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.