டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் போட்டியிட்டார். இதில், துவக்கத்தில் கெஜ்ரிவால் பின்னடவை சந்தித்தார்.
பாஜகவின் பர்வேஷ் வெர்மா முன்னிலை பெற்றார். பின்னர் முன்னிலை பெற்ற கெஜ்ரிவால் சிறிது நேரத்தில் மீண்டும் பின்னடைவை சந்தித்தார். சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்ததால் கெஜ்ரிவாலுக்கு கடும் இழுபறியான நிலை ஏற்பட்டது. இறுதியில் கெஜ்ரிவால் தோல்வியை தழுவினார். 2013- முதல் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்று வந்த கெஜ்ரிவால், பாஜகவின் பர்வேஷ் வெர்மாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
அதேபோல டெல்லியில் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளார். கெஜ்ரிவாலே தோல்வியை இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்கும் தயாராகி வருகிறார்கள்.