குஜராத்: பஸ்-லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.;

Update:2025-02-21 19:02 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போதி கேரா கிராமத்திற்கு அருகே இன்று மதியம் 1 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தனியார் பஸ்-லாரி மோதி விபத்துக்குள்ளாந்து.

இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு புஜ்ஜில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதில் இருவரிம் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதா அல்லது ஒன்று மற்றொன்றின் மீது மோதியதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்