நான் சிவ பக்தன்... வெறுப்பு விஷத்தை விழுங்குவேன்; பிரதமர் மோடி

பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.;

Update:2025-09-14 19:36 IST

கவுகாத்தி,

பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று மணிப்பூர் சென்றார். மணிப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று அசாம் சென்றார். அசாம் மாநிலம் டோரங் மாவட்டம் சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு முடிவுற்ற மற்றும் புதிய வளர்ச்சிதிட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

மோடி மீண்டும் அழுகிறார் என்று காங்கிரஸ் என்னை குறிவைக்கலாம். ஆனால் மக்கள் தான் என் கடவுள். அவர்கள் முன் என் வலியை வெளிப்படுத்தவில்லையென்றால் நான் எங்கு செல்வேன். அவர்கள்தான் எனது குரு, கடவுள், ரிமோர்ட் கண்ட்ரோல். என்னிடம் வேறு ரிமோர்ட் கண்ட்ரோல் இல்லை. எனது தாயாரை வார்த்தைகளால் அவமதித்தார்கள். நான் சிவ பக்தன்... வெறுப்பு என்ற விஷத்தை நான் விழுங்குவேன்

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்