7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் கான்கொ பகுதியை சேர்ந்தவர் மஹர்பன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அந்த பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியின் தாயாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மஹர்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.