'பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால் அது...' - பிரதமர் மோடி அதிரடி பேச்சு

இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது;

Update:2025-05-12 20:54 IST

டெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது,

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரேநேரத்தில் நடக்காது. பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒரேநேரத்தில் நடக்காது. பயங்கரவாதமும், நதிநீரும் ஒன்றாக பாயாது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால் அது பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மட்டுமே. இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. பயங்கரவாதம், வர்த்தகம், பேச்சுவார்த்தை ஒன்றாக நடக்காது.

Tags:    

மேலும் செய்திகள்