கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தின் அருகில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-10-13 07:46 IST

கோவை,

கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ.1,791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நீண்ட மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ந்தேதி திறந்து வைத்து, மேம்பாலத்தில் காரில் சென்றார். இந்த புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தின் அருகில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட் வின்ஸ் பகுதிக்கு பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோரவிபத்தில் கார் லாரிக்கு அடியில் புகுந்து அப்பளம் போல் நொறுங்கியது.

நள்ளவிரல் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 1 மணி நேரம் போராடி லாரிக்கு அடியில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்