பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.;
சென்னை,
சென்னையில் இரும்புலியூர் மேம்பால பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் மந்தமாக நடந்து வரும் நிலையில் சென்னை மார்கமாக வண்டலூர், பெருங்களத்தூரை கடக்கும் வாகனங்கள் அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்கிறது.
இன்று காலை முதலே சென்னை புறநகரில் மேக மூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருவதால் பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே மழையும் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். இதனை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.