சமூகத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற.. இந்த நாளில் உறுதி ஏற்போம் - அண்ணாமலை
சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.;
சென்னை,
தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மகளிர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.