போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக நாளை போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.;
கோவை,
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் (வண்டி எண்:-66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக பிற்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு ரெயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதுபோன்று வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்காரணமாக நாளை கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரெயில் (எண்:- 13352) மற்றும் காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்-பெங்களூரு ரெயில் (எண்: 12678) போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரெயில் கோவை நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூர் கூடுதல் நிலையமாக செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.