பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;

Update:2025-09-05 12:35 IST

விழுப்புரம்,

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.

அதேபோல் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரு ரெயில்களும் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்