தூத்துக்குடி மாநகராட்சியில் சரஸ்வதி பூஜை விழா: மேயர், கமிஷனர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் அங்கமான சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.;
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் அங்கமான சரஸ்வதி பூஜை விழா மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.