சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர் (வயது 64). இவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்துல் கபூரை கைது செய்தார். பின்னர் அவரை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.