திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் தலைமறைவான நபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த சுடலைகண்ணு(எ) துரை (வயது 37) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு இரண்டரை (2½) மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் சுடலைகண்ணு(எ) துரைக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை தாழையூத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.