திருநெல்வேலி: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்ட போலீசார் புகையிலை, கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு பற்றியும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி, காவல் துறையினர் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் முக்கூடல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாபு ஜாண் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதிவேகம் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர், மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நாள்தோறும் பொது மக்களை நேரில் சந்தித்து, புகையிலை மற்றும் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு பற்றியும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.