திருமணத்தை மீறிய உறவா..? பெண் கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்

மனைவியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார்.;

Update:2025-07-04 06:49 IST


திருவள்ளூர், திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே வெட்டிக் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்