போலி கல்வி சான்றிதழ் புகார்: மந்திரி ராஜினாமா

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.;

Update:2025-10-08 20:20 IST

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் அதிபராக பொலா டினும்பு செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, அந்நாட்டு மந்திரி சபையில் யுச்சி நிஜி இடம்பெற்றிருந்தார். அவர் 2023ம் ஆண்டு முதல் அறிவியல், தொழில்நுட்பத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

அதேவேளை, யுச்சி நிஜி போலி கல்வி சான்றிதழை கொடுத்து மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது. ஆனால், தான் 1985ம் ஆண்டு நைஜீரியா பல்கலைக்கழகத்தில் இளநிலை மைக்ரோ பயாலஜி கல்வி பயின்று பட்டம் பெற்றதாக யுச்சி நிஜி கூறி வந்தார். ஆனால், அந்நாட்டை சேர்ந்த செய்தித்தாள் நிறுவனம் நடத்திய ஆய்வில், யுச்சி நிஜி 1981ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார் என்பதும் ஆனால் அவர் படிப்பை நிறைவு செய்யவில்லை, அதற்கான பட்டமும் பெறவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலி கல்வி சான்றிதழ் கொடுத்து மந்திரி சபையில் இடம்பெற்ற யுச்சி நிஜி மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், நைஜீரியாவின் அறிவியல், தொழில்நுட்பத்துறை மந்திரி பதவியை யுச்சி நிஜி நேற்று ராஜினாமா செய்தார். நிஜியின் ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டார். அதேவேளை, யுச்சி நிஜி எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்பட்டதாக அதிபரின் செய்தித்தொடர்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்