அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-04 15:01:06.0
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து பேசினர். இதன் பின்னர் முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் பற்றி குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தி.மு.க.வினரால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக முதல்-அமைச்சரோ, அல்லது துணை முதல்-அமைச்சரோ இந்த விவகாரம் தொடர்பாக ஏன் வாயை திறக்கவில்லை. விசாரணை முடிந்த பிறகு யார் அந்த சார்? என்பது தெரிந்துவிடும் என்று கனிமொழி எம்.பி. கூறுகிறார். ஆனால் விசாரணை சரியாக நடக்காது என்றுதான் நாங்கள் பயப்படுகிறோம்.

போராடும் பெண் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், ஆனால் குற்றவாளிகள் நடமாடுவார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. சி.பி.ஐ. விசாரணை வந்தால் மட்டுமே பாரபட்சமான நடவடிக்கைகள் வெளிக்கொணரப்படும். எனவே இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

1 More update

Next Story