சாமானியர்களும் பத்திரிக்கை படிக்கும் ஆர்வத்தை... ... 118-வது பிறந்தநாள்  சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
Daily Thanthi 2022-09-27 05:03:33.0

சாமானியர்களும் பத்திரிக்கை படிக்கும் ஆர்வத்தை உருவாக்கியவர் சி.பா.ஆதித்தனார் - ஓ.பன்னீர் செல்வம்

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-

அனைத்து தமிழர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்த பெருமை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரையே சேரும் என்றார். மேலும், பத்திரிக்கை துறையில் சி.பா.ஆதித்தனார் படைத்த வரலாற்றை, உலக தமிழர்கள் பறைசாற்றுவார்கள் என்றும், சாமானியர்களும் பத்திரிக்கை படிக்கும் ஆர்வத்தை உருவாக்கியவர் சி.பா.ஆதித்தனார் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.


Next Story