திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்


திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்
Daily Thanthi 2024-12-23 06:41:44.0
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஓங்கூர் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்து அதிக சத்தம் வந்ததால் ரெயிலை லோகோ பைலட் நிறுத்தினார். சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயிலால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். 

1 More update

Next Story