மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
Daily Thanthi 2023-08-10 11:11:56.0
t-max-icont-min-icon

கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம் தொடர்பாக தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தலைமை தேர்தல் ஆணையர், இதர ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் முழக்கம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து. மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாளை காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற மாநிலங்களவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story