மணிப்பூரில் நிச்சயம் அமைதி திரும்பும் - பிரதமர் மோடி உறுதி


மணிப்பூரில் நிச்சயம் அமைதி திரும்பும் - பிரதமர் மோடி உறுதி
x
Daily Thanthi 2023-08-10 13:30:16.0
t-max-icont-min-icon

மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் அமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன். மணிப்பூருடன் நாம் அனைவரும் நிற்கிறோம். விரைவில் அமைதி நிலைநாட்டப்படும்.மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்து வருகின்றன. உயர்நீதிமன்றத்தின் ஒரு உத்தரவு தான் மிகப்பெரிய வன்முறையை தூண்டி விட்டுள்ளது.

மணிப்பூர் குறித்து விரிவான விளக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவே கொடுத்துவிட்டார். மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் அமித்ஷா மேற்கொண்டார். மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முழுமையாக முயற்சி செய்கின்றன.

மணிப்பூர் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. மணிப்பூரில் பெண்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1 More update

Next Story