சர்வதேச யோக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் - ஐ.நா.வில் பிரதமர் மோடி பேச்சு


சர்வதேச யோக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் -  ஐ.நா.வில் பிரதமர் மோடி பேச்சு
x
Daily Thanthi 2023-06-21 12:51:48.0
t-max-icont-min-icon

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.சபை வளாகத்தில்  நடக்கும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சர்வதேச யோக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகவும், மேலும் ஆரோக்கியமாகவும் ஆக்குவோம். 

இந்தியாவின் பழமையான பாரம்பரியமான யோகா உலகளாவியது. யோகா என்றால் ஒன்றிணைவது, அனைவரும் ஒன்றிணைவது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு. ஒட்டுமொத்த உலகமும் யோகாவிற்காக மீண்டும் ஒன்று கூடுவதைப்பார்ப்பது அபூர்வமானது.

உங்கள் அனைவரையும் இங்கு ஒன்றிணைத்துள்ளது யோகா. எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி. சிறு தானியங்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம்  என பிரதமர் மோடி கூறினார்.

1 More update

Next Story