
வக்பு மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நிலைக்குழு தலைவருக்கு எதிராக தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், ஆ. ராசா, அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டுக்குழுவில் இருந்து இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களைப் படிக்க போதுமான நேரம் வழங்காமல் அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






