ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
x
Daily Thanthi 2025-10-03 05:02:33.0
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் சென்றார். நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அதையடுத்து பேராவூர் பகுதியில் இன்று காலை நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டார்.

அப்போது 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட நடந்து முடிந்த ரூ.738 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், “நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சணை, பள்ளிக் கல்வி திட்டத்திற்கும் நிதி தரமாட்டார்கள், பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம்தான் படியளக்க வேண்டும். தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே ஒன்றிய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான். விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 More update

Next Story