மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் என்பது தவறு; கவர்னர் மாளிகை விளக்கம்


மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் என்பது தவறு; கவர்னர் மாளிகை விளக்கம்
x
Daily Thanthi 2025-11-07 09:18:05.0
t-max-icont-min-icon

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் என எழுந்த குற்றச்சாட்டிற்கு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னர் தாமதம் செய்வதாக கூறுவது ஆதாரமற்றது. கவர்னரின் நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை என்பது உண்மைக்கு புறம்பானது. 2025 அக்டோபர் 31 வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீதத்திற்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். 13 சதவீதம் மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story