
ஜனநாயகன் சென்சார் வழக்கு: நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு
ஜனநாயகன் சென்சார் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை இன்று மதியம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டிருந்தார். மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கவும் சென்சார் வாரியத்திற்கு உத்தரவிடட்பட்டது. ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது என்றும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






