கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
Daily Thanthi 2025-10-10 09:32:47.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரும் வழக்கு தொடர்பாக மாநில அதிகாரிகளின் விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை என கரூர் கூட்ட நெரிசலில் பலியான சிறுவனின் தந்தை பிரபாகரன் தரப்பில் வாதத்தை முன் வைத்தார்.

மேலும் நெரிசல் ஏற்படும் என்று திமுக உறுப்பினர் ஒருவர் முன்பே பதிவிட்டிருந்தார். கூட்டத்தில் நெரிசல் ஏற்படும் என்ற 3.15 மணியளவில் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பதிவிட்டவர் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர். மகனின் இறுதிச்சடங்கு நடந்த நேரத்தில் எப்படி நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்? என் மகனை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அந்த இடத்தில் எதுவும் செய்யவில்லை. விஜய் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்துவிட்டனர் என சிறுவனின் தந்தை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம்: உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது.

அதே வேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக சென்னை ஐகோர்ட்டு தான் நியமித்தது.அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம். சிபிஐ விசாரணை தேவையில்லை

அரிய வழக்குகளை மட்டுமே சூழ்நிலைக்கேற்ப பரிந்துரைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உள்ளது. பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐக்கு மாற்றி கொண்டிருந்தால் வழக்குகள் குவிந்து கிடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

1 More update

Next Story