சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இலவச குடிநீர் ஏடிஎம்


சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இலவச குடிநீர் ஏடிஎம்
Daily Thanthi 2025-05-19 03:57:47.0
t-max-icont-min-icon

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை விரைவில் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகைகளில் குடிநீர் வழங்கப்படும். வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்துப் பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி மற்றும் மார்க்கெட் பகுதிகள் என 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1 More update

Next Story