
வரலாற்றில் முதல் முறை.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.
9 நாட்களுக்கு பிறகு நேற்று முன் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதாவது, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.9,865-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






