சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள்... ... குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
Daily Thanthi 2023-10-24 18:20:25.0

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு 

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.

தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

இந்த நிலையில், 10-ம் நாளான இன்று நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிசனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளினார்.

முன்னதாக விரதமிருந்து வேடமிட்ட பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக வருகை தந்தனர். அப்பகுதி முழுவதும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story