பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2,500 போலீசார்கடலில்... ... குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
Daily Thanthi 2023-10-24 20:11:25.0

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2,500 போலீசார்

கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது.

குலசேகரன்பட்டினம் நகர எல்லையில் தசரா குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை முழங்கியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். ஆங்காங்கே தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்கினர். விழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story