200 உடல்கள் கண்டெடுப்பு  தலைநகர் கீவை கைப்பற்றும்... ... #லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரில் 200 உடல்கள் கண்டெடுப்பு
Daily Thanthi 2022-05-24 22:22:13.0

200 உடல்கள் கண்டெடுப்பு

தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாதபோதும், முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ஒருவழியாக ரஷியா முற்றிலுமாக கைப்பற்றி விட்டது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.

இந்த நகரத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஷியா முழுமையான போரை தொடுத்துள்ளது என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ள நிலையில், 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ஆதாரமாகி உள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் 77 ஆண்டு கால வரலாற்றில் இப்படி ஒரு போர் நடந்தது இல்லை என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.


Next Story