
நிகிதாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது உண்மை... ஆனால்... திருமாறன் பரபரப்பு பேட்டி
போலீசார் அடித்துக்கொன்ற திருப்புவனம் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வெளியே வந்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதாவை எனக்கு தெரியும். நிகிதா 4 திருமணங்களை செய்து யாருடனும் வாழவில்லை. எனக்கும், நிகிதாவுக்கும் திருமணம் நடந்தது உண்மை. ஆனால், அன்றைய இரவு பால் பழம் சாப்பிட சென்றபோது அவர் சென்றுவிட்டார். மறுநாள் நாங்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது, தகராறு நடந்தது. எனக்கு முன்னால் 3 பேருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த நிகிதாதான் என எனக்கு தெரிந்திருந்தால், நான் முதலிலேயே வந்திருப்பேன்.
என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story






