மதுரை, சிவகங்கை உள்பட 4 மாவட்டங்களில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025
x
Daily Thanthi 2025-09-08 03:32:07.0
t-max-icont-min-icon

மதுரை, சிவகங்கை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 10-ந்தேதி வரையில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக செஞ்சி, திருப்புவனத்தில் தலா10 சென்டி மீட்டரும், மணலியில் 9 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story