காஞ்சிபுரத்தில் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது


காஞ்சிபுரத்தில் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது
x
Daily Thanthi 2025-09-08 13:04:51.0
t-max-icont-min-icon

வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக முருகன் என்பவர் புகார் அளித்திருந்தார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை எஸ்.சி. எஸ்.டி சட்டப்படி கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story