நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்.. அரசுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
x
Daily Thanthi 2025-09-09 06:58:28.0
t-max-icont-min-icon

நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்.. அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. நாட்டை விட்டு வெளியேற பிரதமர் திட்டம்?

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது

போராட்டக்காரர்களை நேபாள அரசு கையாண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேபாள வேளாண்துறை மந்திரி ராம்நாத் அதிகாரி தற்போது பதவி விலகி உள்ளார். காத்மாண்டுவை உலுக்கி வரும் இளைஞர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் இரண்டு முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்ததை அடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மிகப்பெரும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். இந்த சூழலில் அவர் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஒலி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கடினமான சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

1 More update

Next Story