டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
Daily Thanthi 2025-08-11 08:31:38.0
t-max-icont-min-icon

டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? என்றும் டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story