
விபத்து எதிரொலி.. சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரெயில் சேவையில் மாற்றம்
திருவள்ளூரில் சரக்கு ரெயில் தீப்பிடித்து எரிந்த விபத்து காரணமாக, அவ்வழியாக செல்லும் ரெயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை செல்லவேண்டிய பல ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு புறப்பட வேண்டிய ரெயில்கள் அரக்கோணம் மற்றும் காட்பாடியில் இருந்து புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு
1. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரெயில், இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
2. சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 9.05 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்
3. சென்னை சென்ட்ரலில் இருந்து அசோகபுரம் செல்ல வேண்டிய காவேரி ரெயில், இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
4. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரெயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.






